TA-1017
Tamil

ஆ அம்பர உம்பர புகழுந்திரு

Aa ambara umbara

1
views
பல்லவி

சீர் பக்தரே, அமர்ந்து நீர் நல் வீட்டில் இளைப்பாறுவீர்.

1ம் சரணம்

ஆ பாக்கிய தெய்வ பக்தரே; இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே; இப்போதபாய புயலும் உம்மைச் சேராது கிஞ்சித்தும்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் இன்பத் துறையில் தங்குவீர்.

2ம் சரணம்

ஆ பாக்கிய தெய்வ பக்தரே; உம் மேனி மண்ணில் தூங்கவே, மாண்பாய் எழும்புமளவும் விழித்துக் காத்துக்கொண்டிரும்; சீர் பக்தரே, மகிழ்ந்து நீர் நம் ராஜா வருவார் என்பீர்.

3ம் சரணம்

கேளும், தூயோரின் நாதரே, பரிந்து பேசும் மீட்பரே, வாழ் நாள் எல்லாம், நல்லாவியே, சீர் பக்தரோடு நாங்களும் மேலோகில் சேரச் செய்திடும்.