TA-1045
Tamil

ஆதியும் அந்தமும் நீரே நீரே

Aadhiyum Andhamum Neere

0
views
பல்லவி

ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன் ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2) ஆராதனை உமக்கே (8)

1ம் சரணம்

செங்கடல் எதிரிட்டாலும் பாதைகள் அடைப்பட்டாலும் (2) சேனைகளின் கர்த்தரே (புது) வழியை திறந்திடுவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4)

2ம் சரணம்

சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (2) பலத்தால் என்னை நிரப்பி வழியை செவ்வையாக்குவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4)

3ம் சரணம்

போராட்ட வேலைகளிலும் நிந்தைகள் சூழ்ந்த போதும் (2) எக்காளத்தை எடுத்து எரிகோவை தகர்த்திடுவேன் துதியின் சத்தம் உயர்த்தி எரிகோவை தகர்த்திடுவேன் ஜெயம் என்றும் நமக்கே (4) ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன் ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2) ஆராதனை உமக்கே (8)