TA-1054
Tamil

ஆளுகை என்றும் உம்மிடம்தான்

Aalugai Endrum Ummidamthaan

0
views
பல்லவி

ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே - என் ஆற்றலானவரே

1ம் சரணம்

நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும்

2ம் சரணம்

அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே - என்

3ம் சரணம்

புதிதாக்கும் பரிசுத்தரே புதுப்படைப்பாய் மாற்றுமையா ஊடைத்துவிடும் உருமாற்றும் பண்படுத்தும் பயன்படுத்தும்

4ம் சரணம்

அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளிபெறணும் மகிமையின் அச்சாரமே

5ம் சரணம்

உள்ளான மனிதனை வல்லமையாய் பலப்;படுத்தும் அன்பு ஒன்றே ஆணிவேராய் அடித்தளமாய் அமைந்திடணும்

6ம் சரணம்

கிறிஸ்துவின் அன்பின் ஆழம் அகலம் அயரம் உணரணுமே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்பவரே

7ம் சரணம்

சங்கீதம் கீர்த்தனையால் பிறரோடு பேசணுமே எந்நேரமும் எப்போதுமே நன்றிப் பலி செலுத்தணுமே

8ம் சரணம்

போர் செய்யும் ஆயதமாய் உம் வசனம் தாருமையா எல்லாவித ஜெபத்தோடு ஆவியிலே மன்றாடணும்

9ம் சரணம்

என் இதய பலகையிலே எழுதிடும் உம் வார்த்தை மையாலல்ல உம் ஆவியாலே எழுதிடுமே ஏங்குகின்றேன்

10ம் சரணம்

அரண்களை தகர்த்தெறியும் - என் அன்பின் வல்லவரே எதிரான எண்ணங்களை கீழ்படுத்தும் சிறைபடுத்தும்