என் இதயம் மனம் செயல்
Aandava Umakkae Sthosthiram
ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத் தூண்டும் உன் ஆவி அருள்வாய். என்னைத் தியாகிக்க ஏவும் உன் அனல் மூட்டிடுவாய், இந்நிலம் தன்னில் மாளும் மனுமக்கள் மீட்பிற்காக. – ஆண்டவா
புசிக்கக் பண்டமில்லாமல் பூவில் இல்லமுமே அன்றி, நசித்து நலிந்து நாட்டில் கசிந்து கண்ணீர் சொரிந்து, தேச மெல்லாம் தியங்கும் நேசமக்கள் சேவைக்கே, நிமலா, எனை ஏற்றுக்கொள். – ஆண்டவா
வறுமை வன் கடன் வியாதி, குருட்டாட்டம் கட்டி கடும் அறிவீனம் அந்தகாரம் மருள் மூடி மக்கள் வாடும், தருணம் இக்காலமதால், குருநாதா, உனதன்பை அருள்வாய், அடியேனுக்கே. – ஆண்டவா
அருமை ரட்சகா, உன்றன் அரும்பாடு கண்ணீர் தியாகம், பேரன்பு பாரச் சிலுவை, சருவமும் கண்ட என்றன் இருதயம் நைந்துருகி, வெறும் பேச்சாய் நின்றிடாமல் தருணம் எனையே தந்தேன். – ஆண்டவா
உலகே உனதாயினும் தலைசாய்க்கத் தாவில்லாமல், நலமே புரிந்து திரிந்தாய்; எல்லாம் துறந்து யான் உன் நல்லாவி கொண்டுழைக்க, வல்லா, உனின் சிலுவை அல்லால் வழி வேறுண்டோ? – ஆண்டவா