TA-1073
Tamil

ஆண்டவர் பங்காக தசம பாகம்

Aandavar Pankaha Dasama Paakam

0
views
1ம் சரணம்

ஆண்டவர் (கர்த்தாவே) புயல் வீசிடுதே அலைகளும் பொங்குதே! கார் மேகத்தால் வானம் இருண்டதே! புகலிடம் இல்லையே! மாள்கிறோம் கவலையின்றி, உறங்கலாமோ நீர்? ஒவ்வோர் கணமும் திகில் சூழ்ந்திடுதே ஆழ்கடலில் ஆழ்வோமே ! காற்றும் அலையும் என் சித்தம் போல் அமருமே அமைதியாய், புயல் கொந்தளிக்கும் கடல் தானோ, பேயோ மானிடனோ மற்றெதுவோ, வான்புவி ஆழிகளின் ஆண்டவர், உறங்கிடும் ஓடத்தையே! விழுங்கலாகாது கீழ்ப்படிந்தே அமருமே அமைதியாய் அருமையாய் அவை கீழ்படியும் அமர் அமைதியாய் !

2ம் சரணம்

ஆண்டவா ! ஆவி கலங்கி தவிக்கிறேன் இன்றே துயர் உள்ளத்தின் ஆழம் குமுறுதே! எழுந்து காருமே ! பாவப்பெருக்கும் தத்தளிப்பும் புரளுதென் ஆன்மாவில், அமிழ்ந்தேன் (2) அன்பின் நாதா ! விரைந்தென்னை ஆட்கொள்ளுமே

3ம் சரணம்

கர்த்தாவே, திகில் ஓய்ந்ததே இயற்கை அமர்ந்ததே ஆதவன் ஒளி அக்கடலில் விண்ணொளி என் உள்ளத்தில் மீட்பரே என்னோடு தங்கும் விலகாதீர் என்றும் ஆனந்தமாய் அக்கரை சேர்வேன் இளைப்பாறி சுகிப்பேன்.