♪♫
TA-1106
Tamil
Aarathika Therinthedutheer
Aarathika Therinthedutheer
0
views
பல்லவி
ஆராதிக்க உம்மிடம் வந்தேன் ஆவியால் நிரப்பும் உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன் உம் முகத்தைப் பார்த்து என் உள்ளம் நிறைவேன்
1ம் சரணம்
உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து உறவாடித் துதிக்கணுமே கண்ணீரோடு உந்தனை அணைத்து துதித்து மகிழணுமே
2ம் சரணம்
உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து உம் அன்பால் நிறையணுமே உம் பாதத்தில் விழுந்து பணிந்து உந்தனை உயர்த்தணுமே
3ம் சரணம்
உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து உலகத்தை மறக்கணுமே பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன் தழுவி அணைத்துக் கொள்ளும்