TA-1106
Tamil

Aarathika Therinthedutheer

Aarathika Therinthedutheer

34
views
பல்லவி

ஆராதிக்க உம்மிடம் வந்தேன் ஆவியால் நிரப்பும் உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன் உம் முகத்தைப் பார்த்து என் உள்ளம் நிறைவேன்

1ம் சரணம்

உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து உறவாடித் துதிக்கணுமே கண்ணீரோடு உந்தனை அணைத்து துதித்து மகிழணுமே

2ம் சரணம்

உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து உம் அன்பால் நிறையணுமே உம் பாதத்தில் விழுந்து பணிந்து உந்தனை உயர்த்தணுமே

3ம் சரணம்

உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து உலகத்தை மறக்கணுமே பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன் தழுவி அணைத்துக் கொள்ளும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.