ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இது
Aaththuma Aathaayam Seiguvomae
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ! நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன் பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா
அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை அனைவரும் பாக்கிய ளென்பாரே , முடிவில்லா மகிமை செய்தாரே , பல முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா
பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர் பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ; உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! — ஆத்துமா
முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால் , நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன் நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! — ஆத்துமா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.