TA-1136
Tamil

ஆவியிலே அனலாய் இருப்போமே

Aaviyilae Analaay

0
views
பல்லவி

¦ttஆவியின் கனியோ தெய்வீக கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம் ஆவிக்குள்ளாய் நாம் பிழைப்போம் ஆவிக்குரியோரின் சாட்சியிதே அற்புத ஜீவியமே - தூய பரிசுத்தாவி பொழியுதே பாத்திரம் நிரம்பி வழியுதே புதிய ஜீவன் இயேசு தந்தார் பெலத்தின் மேல் நாம் பெலனடைவோம்

1ம் சரணம்

அன்பு சந்தோஷம் சமாதானம் நீடிய பொறுமை தயவுமே நற்குணம் விசுவாசம் சாந்தம் இச்சையடக்கமே நவகனி திவ்ய சுபாவம் பெற்றுக்கொள்வோம்

2ம் சரணம்

மாமிச சிந்தை மரணமே மனதின் தூய்மை அகலுமே ஆவியின் சிந்தையினால் நமக்கு ஜீவன் சமாதானம் கிடைக்குமே ஜீவ ஊற்றெம்மில் பொங்கிடுமே

3ம் சரணம்

ஜென்ம கரும பாவங்களை சிலுவையில் நாம் அறைந்ததால் புதிய சிருஷ்டிகளாய் மாறி பூரண தேவனின் சாயலாக பிதாவின் மகிமை கண்டடைவோம்

4ம் சரணம்

ஜீவ வசனம் பிடித்து நாம் சுடர்கள் போல பிரகாசிப்போம் கோணலும் மாறுபாடும் நிறைந்த கபட சந்ததி நடுவிலே குற்றமற்றோராய் வாழ்ந்திடுவோம்

5ம் சரணம்

வார்த்தை நடத்தை அன்பு கற்ஙுப விசுவாசம் நல் ஆவியிலும் ஒருவருக்கொருவர் சபையில் ஒளியின் பிள்ளைகள் மாதிரியாய் ஒற்றுமை பண்புடன் நாம் திகழ்வோம்

6ம் சரணம்

கிறிஸ்துவுக்குள் நாம் ஜீவிப்பதால் காகள சத்தம் கேட்டிடு