தெய்வக் கிருபையைத் தேடி,
Deiva Kirubaiyai Theadi
¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦ ¦tt/1. தெய்வ கிருபையைத் தேட நீ போராடிக் கொண்டிரு, ஆவி பாரமின்றி ஏற நன்றாய் ஜாக்கிரதைப்படு.
வாசல் மிகவும் இடுக்கம் தாழ்மையாகி உட்படு; ஜீவனின் வழி நெருக்கம், லோக நேசத்தை விடு.
சேவகத்தில் பின் வங்காமல் ராஜ்ஜியத்துக் குட்படு; பேய் எதிர்த்தால், தளராமல் நின்று, ஏகிக்கொண்டிரு.
பக்தி முழு லோகத்துக்கும் உன்னை நீங்கலாக்கவே பார்த்துக்கொள், பங்கிட்டிருக்கும் நேசம்ஸ்வாமிக் கேற்காதே.
வேண்டுதலினால் போராடி, ஆண்டவரின் தயவு காணுமட்டுக்கும் மன்றாடி, கூப்பிட்டுக் கொண்டேயிரு.
கர்த்தர் உன்னைத் தயவோடே ஏற்றுக்கொண்ட பிறகு பாவம் உன்னிலே வேரோடே செத்ததென் ரெண்ணாதிரு.
ஜீவனுள்ள நாள் மட்டாக மோசங்கள் பல உண்டு; திகிலும் பயமுமாக உன்ரட்சிப்பைக் காத்திடு.
நீ முடுயைப் பெற்றிருந்தால், கெட்டியாய்ப் பிடித்திரு, பின்னடைந்து போய்விழுந்தால் மோசம் மா பெரியது.
மாய்கையை நோக்காதேவிட்டு ஞான ஆயுதங்களை ராவும் பகலும் பிடித்து, நிர்விசாரத்தைப் பகை.
உனதிச்சையை அடக்கு, அதுன் நெஞ்சை ஆளவே கிருபையான விளக்கு மங்