தேவ சித்தம் என்னில் நிறைவேறிட என்னை ஒப்புவித்தேன்
Deva Sitham Ennil
பொன்னைப் போல புடமிட்டாலும் பொன்னாக விளங்குவேனென்றென்றுமே திராணிக்கு மேல் சோதித்திடார் தாங்கிட பெலனளிப்பார்
அத்திரமரம் துளிர் விடாமல் ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும் கர்த்தருக்குள் சந்தோஷமாய் நித்தமம் மகிழ்ந்திருப்பேன்
நீதிமானை அனுதினமும் சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும் கர்த்தர் அன்பைவிட்டு நீங்கா சுத்தனாய் நிலைத்திருப்பேன்
முன்னறிந்து அழைத்தவரே முன்னின்று நலமுடன் நடத்துவார் சகலமும் நன்மைக்கென்றே சாட்சியாய் முடித்திடுவார்
சோதனையை சகிப்பவனே சாந்தமும் பொறுமையுள்ளவனே ஜீவக்கிரீடம் பெற்றிடுவான் ஜோதியாய் பிரகாசிப்பான்
கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள் கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள் இரட்டிப்பான பங்கைப் பெற இரட்சகர் அழைத்திடுவார்ptBதேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குமே 1 முட்களுக்குள் மலர்கின்றதோர் மக்களைக் கவரும் லீலி புஷ்பம்போல் என்னையுமே தம் சாயலாய் என்றென்றும் உருவாக்குவார் 2 பொன்னைப் போல புடமிட்டாலும் பொன்னாக விளங்குவேனென்றென்றுமே திராணிக்கு மேல்