TA-1281
Tamil

தேவசுதன் மீட்டெடுத்த சபையே

Deva Suthan Meetedutha

0
views
1ம் சரணம்

தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ

2ம் சரணம்

வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ

3ம் சரணம்

தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி சுத்தம், மகா சத்யம் , மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ

4ம் சரணம்

புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ

5ம் சரணம்

பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற் புதங்கள் செய்துசிதஙகள் ஓதிக் கதங்களை வென்றார்