TA-1288
Tamil

தேவா என்னைப் படைக்கிறேன்

Devaa Ennai Padaikkirean

0
views
பல்லவி

தேவா, திருக்கடைக்கண் பார், ஐயா! வினைதீர், ஐயா, வினைதீர், ஐயா. கோவாய் உலகில் வந்த யோவா, சச்சிதானந்தா! – தேவா

1ம் சரணம்

மேவிய தயை நிரம்பி, ஆவலுடனே விரும்பி, பாவி எனையே திரும்பிப் பார், ஐயா, ஸ்வாமி! – தேவா

2ம் சரணம்

பொல்லா உலகம் பகை, எல்லாச் செல்வமும் புகை; வல்லா, உனின் கிருபை கூர், ஐயா, ஸ்வாமி. – தேவா

3ம் சரணம்

அந்தி சந்தியும் விடாமல், தந்திரப் பசாசடாமல், எந்த விதமும் கெடாமல் ஆளுமே, ஸ்வாமி! – தேவா

4ம் சரணம்

சர்ப்பனை[1] யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால், எப்படி அடிமை கரை யேறுவேன், ஸ்வாமி! – தேவா

5ம் சரணம்

எத்தனை துயர் அடைந்தேன்! மெத்தவும் மன துடைந்தேன்; சித்தம் இரங்காய், என் மணவாளனே, ஸ்வாமி! – தேவா

6ம் சரணம்

இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு வந்தனம்! அனந்தனந்தம் ஸ்தோத்திரமே, ஸ்வாமி! – தேவா