TA-1337
Tamil

வாசம் செய்பவரே

El Shaddai Vaasam Seibavare

0
views
பல்லவி

ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம் ஏசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவராம்

1ம் சரணம்

மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார் மாடுகட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மா அந்தி வானம் சிவக்குதம்மா அல்லி மலர் சிரிக்குதம்மா ஆண்டவராம் இயேசு பிரான் அன்பு மணம் மணக்குதம்மா

2ம் சரணம்

முள்முடி சூட்டி வந்த முதல் தலைவன் இயேசுவுக்கு கல்வாரி சிலுவையிலே காயம் பட வைத்தனரே உயிர் மரித்தெழுந்த எங்கள் உத்தமரே இயேசு ஐயா நீர் இன்றி உலகத்திலே நீதி தெய்வம் வேறு உண்டோ?