♪♫
TA-1378
Tamil
என்மேல் நினைவானவர்
En Mael Ninaivaanavar
0
views
பல்லவி
என் மேய்ப்பர் நீர்தானையா எனக்கென்றும் குறைவேயில்லை (2) நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே (2)
1ம் சரணம்
நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர் உம் மகிமை விளங்கும்படி (2) 2ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர் புது உயிர் தருகின்றீர் (2)
2ம் சரணம்
எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர் விருந்து படைக்கின்றீர்(2)
3ம் சரணம்
நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும் உம் கிருபை பின் தொடரும்(2)
4ம் சரணம்
இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே பயமில்லையே வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா(2)
5ம் சரணம்
தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர் பாத்திரம் நிரம்பி வழிகின்றது(2)