என் தாய் உருவாகுமுன்னே
En thaai uruvagummunaee
என் தகப்பனே என் இயேசுவே என் துணையாளரே என் நம்பிக்கையுமே நீரில்லா வாழ்கை வெறுமைதானே நீரில்லா வாழ்கை தனிமைதானே நீரில்லா வாழ்கை சுமைதானே நீரில்லா வாழ்கை இருள்தானே
உம்மோடு நான் நடந்திட உம்மோடு நான் பேசிட உம் தோளில் நானும் சாய்ந்திட உம்மையே நான் நேசிக்க உம் வார்த்தையால் உம் பெலத்தால் விலகாமல் என்னை காத்திடும்
உம் அன்பு எனக்கு போதுமே உம் வார்தையால் நான் வாழுவேன் உம் கரம் எனக்கு போதுமே உம் கிருபையால் நான் வாழுவேன் உம் தயவு உம் கரமே நித்தமும் என்னை தாங்கிடும்
உம் நாமம் சொல்லி துதித்திடவே உமக்காய் நித்தமும் வாழுந்திட கரம் பிடித்து என்னை நடத்துமே உம் மகிமையில் நான் சேர்ந்திட உம் சித்தம் நான் செய்திட நித்தமும் என்னை நடத்திடும்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.