♪♫
TA-1426
Tamil
என்னால் ஒன்றும் கூடாதென்று
Ennaal Ontrum
15
views
பல்லவி
என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன்
1ம் சரணம்
எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர்
2ம் சரணம்
யெகோவா யீரே எல்லாம் பார்த்துகொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பெலன் தருவார் அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார்
3ம் சரணம்
எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கருமுதலாய் என்மேல் கண் வைத்து நன்மைகள் செய்பவரே ஆகாரின் கண்ணீரை மாற்றினவர் என் கண்ணீர் மாற்றிடுவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.