TA-1431
Tamil

Ennai kaanpavarae ennai

Ennai kaanpavarae ennai

0
views
பல்லவி

என்னைக் கண்டார் – இயேசு என்னைக் கண்டார் – உள்ளங்கையில் என்னை வரைந்து கொண்டார் கண்ணுக்குள்ளே என்னை வைத்து கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார் இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன் இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம்

1ம் சரணம்

கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார் சத்துருவை அவர் துரத்தி விட்டார் சாபத்தையும் வியாதியையும் சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார்

2ம் சரணம்

மீட்டுக் கொண்டார் – என்னை மீட்டுக் கொண்டார் – பாவத்திலிருந்தென்னை மீட்டுக் கொண்டார் சொந்த பிள்ளை என்றும் என்னை உறுதிப்படுத்த தம் ஆவி தந்தார்

3ம் சரணம்

ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார் சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார் உலகத்தின் மேல் ஜெயமெடுக்க விசுவாசத்தின் வலிமை தந்தார்