TA-1439
Tamil

எந்நாளுந் துதித்திடுவீர் – அந்த

Ennalun Thuthithiduveer

0
views
பல்லவி

என்னாலுரைக்க முடியாதே – என்றன் இருதய மகிழ்ச்சி இப்போதே முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு மன்னவனார் தேடிக்கண்டு மாற்றைனார் பவத்தினை தேற்றினார் அகத்தினை

1ம் சரணம்

காட்டினில் அலைந்த ஆடுநானே – எனைக் கண்டு பிடித்தவர் யேசு கோனே வீட்டினுள் மகிமையைக் கண்டேனே – இனி வியந்து விரைந்து பாடுவேனே நாட்டினில் எனைத்தொடர் ஓனாய் புலி யாவும் வெருண்டு ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேன்

2ம் சரணம்

பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே – பாவப் பயங்கல் சந்தேகந் தொலைத்தாரே ஆவல் ஆசையும் அகற்றினாரே – தேவ அன்பினை அகத்துள் ஊற்றினாரே தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும்

3ம் சரணம்

சத்துருவினால் விளைந்த கோட்டை – எல்லாம் தாண்டிவந்தேன் யேசு பெருங்கோட்டை பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப் – பெறப் பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத் தத்தம் செய்துவிட்டேன் அவர் தஞ்சமே காவில் தான் அஞ்சிடேனே இனி

4ம் சரணம்

ஆசை மிகும் யேசு பெருமானே – பதி னாயிரம் பேரில் சிறந்த கோனே வாச லீலிப்பீவே சீவதேனே – வா ன மன்னாவே இலங்கு கதிரோனே மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழுப்பும் நேசத்தால் மகிழ்ந்றென் தென்றும் நீடுவாய் கிருபைகள் சூடுவாய் தோத்திரம்