♪♫
TA-1450
Tamil
Eppadi Paaduven Naan En
Eppadi Paaduven Naan En
0
views
பல்லவி
எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ எது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ
1ம் சரணம்
என் யேசுநாதர் என் ஆத்தும மீட்பர் என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை
2ம் சரணம்
தூதர்கள் கூடிச் சோபனம் பாடி நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை
3ம் சரணம்
ஜீவ கிரீடம் திவ்விய வாழ்வு பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே
4ம் சரணம்
துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும் இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும்
5ம் சரணம்
உலகத்தின் கவலை ஒன்றும் செய்யாதே பலவிதத் தொல்லை இராது அங்கே பாக்கியம் கொள்வேன்
6ம் சரணம்
கைகளில் எடுத்தென் கண்ணீரைத் துடைப்பார் ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன்