TA-1450
Tamil

Eppadi Paaduven Naan En

Eppadi Paaduven Naan En

0
views
பல்லவி

எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ எது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ

1ம் சரணம்

என் யேசுநாதர் என் ஆத்தும மீட்பர் என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை

2ம் சரணம்

தூதர்கள் கூடிச் சோபனம் பாடி நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை

3ம் சரணம்

ஜீவ கிரீடம் திவ்விய வாழ்வு பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே

4ம் சரணம்

துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும் இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும்

5ம் சரணம்

உலகத்தின் கவலை ஒன்றும் செய்யாதே பலவிதத் தொல்லை இராது அங்கே பாக்கியம் கொள்வேன்

6ம் சரணம்

கைகளில் எடுத்தென் கண்ணீரைத் துடைப்பார் ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன்