TA-1452
Tamil

எப்போதும் தொடர்பு கொள்ள முடிந்தவரே

Eppodhum Thodarbu Kolla

14
views
1ம் சரணம்

இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது; பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே.

2ம் சரணம்

சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம் நீர் தாங்கி, மனதார மரித்தீர்; உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும் அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர்.

3ம் சரணம்

நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து, மரண அவஸ்தை உண்டாகையில், தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து, ஒளி உண்டாக்கும் அச்ச ராவினில்.

4ம் சரணம்

நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்; என் தலையை உம் மார்பில் அணைத்தே, என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்; அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.