TA-1453
Tamil

இப்போது, நேச நாதா, தலை சாய்த்து

Eppothu yesu natha

0
views
பல்லவி

எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையா குறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா

1ம் சரணம்

உம் இல்லம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையா நிரந்தர பேரின்பமே -என் நேசரே

2ம் சரணம்

என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரே பரம்பரைச் சொத்தும் நீரே

3ம் சரணம்

என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர் அசைவுற விடமாட்டீர்

4ம் சரணம்

கல்வாரி எனக்காக காயங்கள் எனக்காக திரு இரத்தம் எனக்காக சிந்தியே ஜீவன் தந்தீர்