TA-1460
Tamil

எத்தனை நாட்கள் செல்லும்

Eththanai Naatkal Sellum

0
views
பல்லவி

எத்தனை நாவால துதிப்பேன்-எந்தன் கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும், நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை

1ம் சரணம்

நம்பினோரல்லோ அறிவார்-எந்தன் தம்பிரானே உந்தன் கம்பீர குணம், அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல் சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை

2ம் சரணம்

பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப் பேதை பலவீனம் பாராதருள் கோனே! சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர் தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே! – எத்தனை

3ம் சரணம்

துணிவாய் என் நெஞ்சே தீவிரமாய்-மிகத் தொழுது ஆண்டவன் செயல் நினைந்து, எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை விண்ணவன் சேவையில் வீரமாய்ச் செல்லு. – எத்தனை