TA-1462
Tamil

எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ

Eththarunathil Uyir Vazhi Piriyumo

0
views
பல்லவி

இது அதிசயமே எனக்கானந்தமே இன்ப பரலோகம் துறந்தெனக்காய் இகத்தில் இயேசுவே மனுவாய் உதித்தார்

1ம் சரணம்

விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில் என்னையும் எண்ணியே தம் மனதில் தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து தயாபரனாய்த் தோன்றினார் - தேவ

2ம் சரணம்

மானிடர் மன இருள் நீக்கிடும் மெய் மா ப்ரபையோ டிலங்கும் மகிபன் மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத் தந்தாரே விந்தையிதே - கர்த்தர்

3ம் சரணம்

சமாதானப் பிரபுவாய் ஜெகத்தில் வந்தே சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார் நன்றியோடே நானும் பாடிடுவேன் நற்பரன் இயேசுவையே - எந்தன்

4ம் சரணம்

பறந்திடும் பறவைக்கும் கூடு உண்டே பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே இயேசுவுக்கோ தலைசாய்த்திடவோ எங்குமோர் ஸ்தலமுமில்லை - பூவில்

5ம் சரணம்

சாந்தமும் தாழ்மையும் நீதியுமே சிறப்புடன் விளங்கிடுதே அவரில் இந்நுகமே எனக்கெந் நாளுமே சொந்த மென்றேற்றிடுவேன்-என்றும்