♪♫
TA-1463
Tamil
Evalavu Nalla Deivam
Evalavu Nalla Deivam
0
views
1ம் சரணம்
எவ்வண்ணமாக, கர்த்தரே, உம்மை வணங்குவேன்; தெய்வீக ஈவைப் பெறவே ஈடென்ன தருவேன்?
2ம் சரணம்
அநேக காணிக்கைகளால் உம் கோபம் மாறுமோ? நான் புண்ணிய கிரியை செய்வதால் கடாட்சம் வைப்பீரோ?
3ம் சரணம்
பலியின் ரத்தம் வெள்ளமாய் பாய்ந்தாலும், பாவத்தை நிவிர்த்தி செய்து சுத்தமாய் ரட்சிக்கமாட்டாதே.
4ம் சரணம்
நான் குற்றவாளி, ஆகையால் என்பேரில் கோபமே நிலைத்திருந்து சாபத்தால் அழிதல் நியாயமே.
5ம் சரணம்
ஆனால் என் பாவம் சுமந்து ரட்சகர் மரித்தார்; சாபத்தால் தலை குனிந்து தம் ஆவியை விட்டார்.
6ம் சரணம்
இப்போதும் பரலோகத்தில் வேண்டுதல் செய்கிறார் உம் திவ்விய சந்நிதானத்தில் என்னை நினைக்கிறார்
7ம் சரணம்
இவ்வண்ணமாக, கர்த்தரே, உம்மை வணங்குவேன். என் நீதி இயேசுகிறிஸ்துவே, அவரைப் பற்றினேன்.