இளைப்பாறுதல் ஈந்திடும்
Ilaipaaruthal Iinthitum Naatae
இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே இன்ப இயேசுவின் மோட்ச வீடே புவியாத்திரை தீர்ந்திடும் போதே பரலோகம் அழைத்திடுமே எந்தன் வாஞ்சை உயர் சீயோன் என்னை வந்தவர் சேர்த்துக்கொள்வார் கண்ணீர் யாவையுமே மிக அன்புடனே கர்த்தர்தாமே துடைத்திடுவார்
இந்த மண்ணுலகாசை வெறுத்தேன் இப்புவி எந்தன் சொந்தமல்ல இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு இலக்கை நோக்கித் தொடருகிறேன்
நம் முன்னோர் பலர் அக்கரை மீதே நமக்காகவே காத்திருக்க விண்ணில் ஜீவ நதிக்கரை ஓரம் வேகம் நானும் சேர்ந்துகொள்வேன்
அற்பமான சரீரம் அழிந்தே அடைவேன் மறுரூபமாக புதுராகம் குரல் தொனியோடே புதுப்பாட்டு பாடிடுவேன்
பரலோகத்தில் இயேசுவே அல்லால் பரமானந்தம் வேறில்லையே அங்கு சேர்ந்து அவர் முகம் காண்போம் ஆவல் தீர அணைத்துக் கொள்ளுவோம்
உண்மையாக உம் ஊழியம் செய்ய உன்னத அழைப்பை ஈந்தீரே தவறாமலே காத்த கரத்தில்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.