TA-2232
Tamil

இளைப்பாறுதல் ஈந்திடும்

Ilaipaaruthal Iinthitum Naatae

0
views
பல்லவி

இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே இன்ப இயேசுவின் மோட்ச வீடே புவியாத்திரை தீர்ந்திடும் போதே பரலோகம் அழைத்திடுமே எந்தன் வாஞ்சை உயர் சீயோன் என்னை வந்தவர் சேர்த்துக்கொள்வார் கண்ணீர் யாவையுமே மிக அன்புடனே கர்த்தர்தாமே துடைத்திடுவார்

1ம் சரணம்

இந்த மண்ணுலகாசை வெறுத்தேன் இப்புவி எந்தன் சொந்தமல்ல இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு இலக்கை நோக்கித் தொடருகிறேன்

2ம் சரணம்

நம் முன்னோர் பலர் அக்கரை மீதே நமக்காகவே காத்திருக்க விண்ணில் ஜீவ நதிக்கரை ஓரம் வேகம் நானும் சேர்ந்துகொள்வேன்

3ம் சரணம்

அற்பமான சரீரம் அழிந்தே அடைவேன் மறுரூபமாக புதுராகம் குரல் தொனியோடே புதுப்பாட்டு பாடிடுவேன்

4ம் சரணம்

பரலோகத்தில் இயேசுவே அல்லால் பரமானந்தம் வேறில்லையே அங்கு சேர்ந்து அவர் முகம் காண்போம் ஆவல் தீர அணைத்துக் கொள்ளுவோம்

5ம் சரணம்

உண்மையாக உம் ஊழியம் செய்ய உன்னத அழைப்பை ஈந்தீரே தவறாமலே காத்த கரத்தில்