TA-1500
Tamil

இனி நீர் மாத்திரமே நீர் மாத்திரமே

Isravelin Thuthigalil

16
views
பல்லவி

இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமே

1ம் சரணம்

உம் வாசல்களில் துதியோடும் உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும் உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம் உம் நாமத்தை ஒருமித்துமே உயர்த்தியே போற்றுகிறோம்

2ம் சரணம்

இஸ்ரவேலின் எக்காளம் மகா ஆரவாரத்தின் முழக்கத்தின் முன் எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல் இப்போ சத்துருவின் கோட்டைகளை இடித்து தகர்த்திடுமே

3ம் சரணம்

எதைக் குறித்தும் கவலைப்படாமல் எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றீர் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு இப்போ எல்லா புத்திக்கும் மேலான உம் சமாதானம் ஈந்திடுமே

4ம் சரணம்

ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மை ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே ஆலயம் மகிமையால் நிரம்பினது போல ஆலயமாய் எம்மை பூவில் காண உம் மகிமையால் நிரப்பிடுமே

5ம் சரணம்

உம் கிருபையின் மகிமைக்குமே எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர் எம் சுதந்திரத்தின் அச்சாரமாக எம்மை மீட்கவே முத்தரித்தீரே எம் ஆவியானவரால்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.