TA-1504
Tamil

ஐயையா நான் ஒரு மா பாவி என்னை

Iya iya naan oru maa pavi

0
views
பல்லவி

ஐயா உம் திருநாமம் அகிலமெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும்

1ம் சரணம்

கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை கண்டு மகிழ வேண்டும் கழுவப்பட்டு வாழ வேண்டும்

2ம் சரணம்

இருளில் வாழும் மாந்தர் பேரொளியைக் கண்டு இரட்சிப்பு அடைய வேண்டும் இயேசு என்று சொல்ல வேண்டும்

3ம் சரணம்

சாத்தானை வென்று சாபத்தினின்று விடுதலை பெற வேண்டும் வெற்றி பெற்று வாழ வேண்டும்

4ம் சரணம்

குருடரெல்லாம் பார்க்கணும் முடவரெல்லாம் நடக்கணுமே செவிடரெல்லாம் கேட்கணுமே சுவிஷேசம் சொல்லணுமே