♪♫
TA-1516
Tamil
ஜகநாதா, குருபரநாதா, திரு
Jaganaatha Gurubaranaatha Thiru
0
views
1ம் சரணம்
ஜகத்து நீதிபதியே, சந்தேகம், மருள் நீக்கிடும்; மகத்வ உம்தன் காட்சியே மெய்மை விளங்கச் செய்திடும்; விரைந்து வாரும்; உம்முன்னே மறையும் எந்தப் பொய்யுமே.
2ம் சரணம்
மன்னா மன்னா, வந்தாளுமே மண்ணிலும் தாசர் நெஞ்சிலும்; இன்னா இக்கட்டு நீங்கவே இகத்தின் பாவம் மாய்ந்திடும்! விரைந்து வாரும்; உம்முன்னே மறையும் எந்தத் தீங்குமே.
3ம் சரணம்
எல்லா நரர்க்கும் ஜீவனே, எவ்வீட்டிலும் பலத்தோடும் பொல்லாத சாவு புகவே பாடுற்றோம் அடியார்களும்; விரைந்து வாரும், உம்முன்னே மறைந்து நோவு சாவுமே.
4ம் சரணம்
மெய்யான எங்கள் ஜோதியே, மங்குல எப்பாலும் மூடவும், அய்யா, உம்தன் வருகைக்கே ஆசித்து நின்றோம் நாங்களும்; விரைந்து வாரும், யேசுவே, வந்தடியாரைத் தேற்றுமே.