TA-1517
Tamil

ஜகத்து நீதிபதியே,

Jakathu Neethipathiyae

0
views
1ம் சரணம்

ஜெயஜீவியமே ஆ! ஆ!! அற்புதமே இயேசுவில் கண்டடைந்தேன் - நானே தந்ததோர் ஜெயமே இந்த கானகமே தம் கிருபை தனமே

2ம் சரணம்

பாசமுற உம்மில் வென்றதோர் உயர்த்தும் மாசறு ஜெயக்கொடியே நேசுறவே கேட்கும் ராஜனின் தொனியும் தேசுற ஏறுதென்னில்

3ம் சரணம்

மாமிசமேயிதை சேவித்திடவே பார்மிசை கடனாளியோ மாதூய இரத்தத்தால் கொண்டவரவர்க்கே மாத்திரம் சொந்தமே நான்

4ம் சரணம்

தாழ்த்தியே மேற்கொள்ளும் வல்லமையனைத்தும் கீழ்ப்படுத்தும் செயலே சாவினையே அறவே பரிகரித்தே காவினில் தரும் ஜெயமே

5ம் சரணம்

சாலேமை சூழ்ந்துமே நிற்கும் மலைகள் போலவர் கிருபைகளே சோதனையில் வழுவாதென்னை ஜெயமாய் சேர்க்கும் சிங்காசனமே

6ம் சரணம்

தாகமள்ளோரே நீர் ஜீவநதியில் ஏகமாய் பருகிடுவீர் ஆகவே தம் ஜெயம் உம் உரிமையதாய் வேகமாய் விரைந்திடுவீர்