காலையும் மாலையும் பாடி துதிப்போம்
Kalaiyum Malaiyum Paadi
காலா காலம் உன்னைக் காத்த பிதா இன்னும் காத்துக்கொள்ளுவார் கடைசி வரை அநாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர் அன்பு காருண்யம் உடையவரே
நீ செல்லும் பாதையில் உன் கரத்தை நீதியின் வலக்கை தாங்கிடுமே நான் உன் தேவன் என்றார் யெகோவா நித்திய கன்மலை ஜெனிப்பித்தாரே திடன் கொள்ளவே
ஆயிரம் தலைமுறை ஆண்டுகளும் ஆண்டவர் இரக்கம் தயவிருக்கும் வாக்கு மாறிடாரே கர்த்தாவே வல்லவர் சொற்படி நடப்பதாலே செழிக்கும் வாழ்வே
இவ்வன லோகத்தில் உபத்ரவமே ஒவ்வொரு தினமும் சோதனையே ஏசு ஜீவிப்பதால் திடன் கொள் எதிர்ப்பு சக்திகள் எதுவும் உன்னை மேற்கொள்ளாதே
வருட துவக்க முதல் முடிவு வரையும் உன்னை கண்ணோக்கிடுவார் கன்மலை நிழலாய் உன்மேலே கடந்து பறக்கும் பறவை போல தினமும் காப்பார்
அப்பமும் திராட்சரசம் கொடுத்து ஆபிரகாமை ஆசீர்வதித்தார் உன்னையும் எதிர்கொண்டு வானில் உன்னதமானவர் வருகின்றாரே பறந்து செல்வாய்