TA-1598
Tamil

அதால் நாங்கள் ஏற்பதிலும்

Lokanaatha Mannor

17
views
1ம் சரணம்

மா கெம்பீரப் பாட்டோடும் தேவ பட்டயத்தோடும் ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்; தேவ அன்பின் பாசத்தை காட்டிப் பாவச் சிறையை மெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம் வெல்லும் தேவ சுதனார் எங்கள் பாவம் மன்னித்தார் பயமின்றிப் பாவம் வென்று ஜெயம் பெறப் போகிறோம்!

2ம் சரணம்

மெய்யாய் ஜீவ தேவனை சேவிப்போம் எம் நாயனை இவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்; இவரன்பின் கரத்தால் நீ மன்னிப் படைந்தால் பெரும் பாதகனானாலும் சிட்சியார்!

3ம் சரணம்

ஜெயம் பெறப் போகிறோம் பாவம் போக்கச் செல்கிறோம், மீட்பர் மகிமை உரத்துக் கூறுவோம்! இங்கே யுத்தம் முடித்து, கோடா கோடி ஜெயித்து; ஆயத்தமான மேல் மண்டபஞ் சேருவோம்

4ம் சரணம்

பாவ சாபம் மடிய பேயின் கூர்மை ஒடிய தேவ வாக்காய் ஜெயம் பெறப் போகிறோம்! இரட்சிப்பின் நாள் கிட்டுது, இத்தேசம் விழிக்குது, இரட்சண்ய சேனையார் நாம் வெல்கிறோம்!

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.