TA-1006
Tamil

சொல்லிவிடாதே அவனைத் தள்ளிவிடாதே (2)

Manithan Yaarenru

0
views
பல்லவி

நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி நம் தேசம் பாழானதே இயேசு ராஜனை நாடி சேரும்வரை நம் வாழ்வும் வீணானதே தேவா எழுப்புதல் எங்கள் உள்ளத்தில் நித்தம் தாரும் எம் நேசரே எங்கள் வாழ்வும் வழியும் எங்கள் சொல்லும் செயலும் உம் பாதம் தந்தோம் ஐயா - 2 - தேவா

1ம் சரணம்

மாயையாம் இப்பூமியில் மயங்கியே அலைந்தோம் ஐயா - 2 நேசரே உயிர் ஈந்ததால் நேசமாய் வாழ்வை பெற்றோம் - 2 - தேவா

2ம் சரணம்

இருளின் பாதைதனில் வாழ்ந்திடும் மாந்தர்தனை - 2 ஒளியண்டை நடத்திடவே ஒளியாய் மாற்றும் தேவா - தேவா

3ம் சரணம்

திறந்த வாசல் இன்றே நற்செய்தி சொல்வோம் நன்றே - 2 வருகையின் நாள் முன்னமே விரைந்தே செயல்படுவோம்