TA-1661
Tamil

முடியாத நன்மைகள் செய்பவரே

Mudiyaatha Nanmaigal

0
views
பல்லவி

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்

1ம் சரணம்

வருத்தத்தோடல்ல, கட்டாயத்தாலல்ல இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம் விதை விதைத்திடுவோம் அறுவடை செய்வோம்

2ம் சரணம்

அதிகமாய் விதைத்தால், அதிக அறுவடை ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை அளவின்றி கொடுத்து, செல்வர்களாவோம் அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்

3ம் சரணம்

ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம் கர்த்தருக்குக் கடன் கொடுத்துத் திரும்பப் பெற்றிடுவோம் எந்த நிலையிலும் தேவையான தெல்லாம் எப்போதும் நமக்குத் தந்திடுவாரே

4ம் சரணம்

நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும் மிகுதியாகவே தந்திடுவாரே எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர் குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்