நாள்தோறும் புதிதாய்
Naal Thorum Puthithaai
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே ஓளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா
தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன் அதையே நாடுவேன் வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில் வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும் எனக்கோ குறையில்லை குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார் கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.