TA-1678
Tamil

நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்

Naan Andavarukaga

0
views
பல்லவி

நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க நித்திய மகிழ்ச்சி அடைவேன் மத்திய ஆகாய மீதிலே மன்னன் இயேசுவை காணுவேன்

1ம் சரணம்

மணவாளன் தட்டும் போத ஆயத்தமே மங்கிடாதே என் விளக்குகளே ஜீவச்சுடர் ஒளியாய் ஜொலிப்பேன் தேவப்பிதா தங்கும் மாளிகையில்

2ம் சரணம்

சுபதின வெண் வஸ்திரம் ஆயத்தமே சீருடனே நான் தரித்திடுவேன் ஆட்டுக் குட்டியானவர் விருந்தில் அன்பரோடே நானும் வீற்றிருப்பேன்

3ம் சரணம்

சுவிசேஷ பாதரட்சை ஆயத்தமே சேவையிலே நான் அணிந்திடுவேன் இயேசுவின் நாள் வேகம் நெருங்கிடுதே இந்த நற்செய்தியைச் சாற்றிடுவேன்

4ம் சரணம்

பாடுபட்டு மரிக்கவும் ஆயத்தமே பாரினிலே என் இயேசுவுக்காய் பற்பல துன்பங்கள் சகித்திடுவேன் பேரின் ராஜ்ஜியம் சேர்ந்திடுவேன்

5ம் சரணம்

எக்காளங்கள் தொனித்திட ஆயத்தமே என் அரும் இயேசு வருகிறாரே ஆமென் என் இயேசுவே வாரும் என்றேன் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன்

6ம் சரணம்

பரலோகம் செல்ல நானும் ஆயத்தமே பொன் நகரம் நான் சுதந்தரிப்பேன் அல்லேலூயா பாடிப் பறந்திடுவேன் ஆண்டவர் அழைத்திடும் நாளதிலே