TA-1690
Tamil

மெய் விசுவாசத் திண்மையால்

Naan Moovaraana Yeagarai

15
views
பல்லவி

நான் நானே கர்த்தர் நான் நானே தேவன் என்னாலன்றி இரட்சிப்பு இல்லை என்னாலன்றி மீட்பும் இல்லை பெயர் சொல்லி அழைத்தேன் கரம் பிடித்திழுத்தேன் – நான்

1ம் சரணம்

நீ தண்ணீரைக் கடக்கும்போது – நான் உன்னோட இருப்பேன் நீ ஆறுகளை கடக்கும்போது அது உன் மேல் புரளாது அக்கினி ஜுவாலை உன்னை அழிக்காது நீ என் பார்வைக்கு அருமையாய் இருப்பாய்

2ம் சரணம்

மா மலைகள் விலகினாலும் – அந்த மலைகள் சாய்ந்தாலும் இந்த பூமி மாறினாலும் – பெரும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் கிருபையோ உன்னை விட்டு என்றும் விலாகாது சமாதான் உடன்படிக்கை நிலைபெயராது

3ம் சரணம்

இதோ இரட்சிக்கும் என் கரமோ அது குறுகியே போகாது நான் கேட்கவும் கூடாமல் செவி மந்தமும் ஆகாது பாவத்தை விட்டு விட்டு என்னண்டைக்கு வா வா நானே உன் இயேசு உனக்காக மரித்தேன்