TA-1694
Tamil

Naan Paadi Makizhum

Naan Paadi Makizhum

0
views
பல்லவி

நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும் கவி தங்கிடும் மா சந்தோஷம் மறுபிறப்பீந்து மன இருள் நீக்கினார்

1ம் சரணம்

என் ஆத்ம மீட்பை அருமையாய் இயேசாண்டவர் எண்ணினதால் சொந்த தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய் சிந்தி இரட்சித்தாரே

2ம் சரணம்

கார்மேகம் போல் என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே மூழ்கியே தள்ளும் சமுத்திர ஆழம் தூக்கி எறிந்தாரே

3ம் சரணம்

இரத்தாம்பரம் பொன் சிவப்பான இதய பாவங்களை பஞ்சையும் போலவே வெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார்

4ம் சரணம்

மேற்கு திசைக்கும் கிழக்குக்கும் மா எண்ணிலா தூரம் எந்தன் பாவங்கள் அத்தனை தூரம் இயேசு விலக்கினார்

5ம் சரணம்

நான் ஜலத்தினால் நல் ஆவியினால் நான் மறுபடியும் பிறந்தேன் தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக தேடிக்கொண்டேன் பாக்யம்

6ம் சரணம்

அங்கேயும் சீயோன் மலைமீதே ஆனந்தகீதங்களே ஆயிரம் ஆயிரம் தூதர்கள் சூழ அன்பரை பாடிடுவேன்