TA-1713
Tamil

நாங்கள் பாவப் பாரத்தால்

Naangal Paava Paarathaal

0
views
பல்லவி

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார் சத்துருவின் தந்திரங்கள் எல்லாம் அழித்திடுவார் அவர் அழித்திடுவார் சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம் அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம் – நாங்கள்

1ம் சரணம்

எரிகிற அக்கினி சூளையிலும் விடுதலை அக்கினியாய் வந்திடுவார் சேதம் வராமல் காத்திடவே -2 தேவக்குமாரனாய் வெளிப்படுவார்

2ம் சரணம்

நிகரே இல்லா பட்டயம் அவர் நீதியின் கரத்தினால் நடத்திடுவார் உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே- 2 உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்

3ம் சரணம்

மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர் மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம் துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே – 2 தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே

4ம் சரணம்

சிங்கத்தின் வாயை அடைத்திடுவார் எரிகோவின் கோட்டையை அழித்திடுவார் இராஜாதி இராஜா வருகின்றாரே – 2 மேகங்களுடனே வருகின்றாரே