TA-1716
Tamil

நாதா, உம்மைப் பணிவோம்

Naathaa Jeevan Sugam

0
views
1ம் சரணம்

இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால் சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான் நிந்தை துன்ப துயரநேரங்களிலும் உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர்

2ம் சரணம்

மீட்டுக்கொண்டீர் மானிடரின் நடுவினின்று நீதியின் கனியாய் மகிமையில் துலங்க நற்குல திராட்சக் கொடியாய் உம்மோடிணைந்து – நாதரே உம் தோட்டத்திலே நானும் நிலைக்க

3ம் சரணம்

மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்கு – பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி உந்தன் மகிமையிலே நீர் ஏற்றுக்கொள்வீரே

4ம் சரணம்

ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில் ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன்ptU1 நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய் நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே – நாவினாலே பாடிப் போற்ற நாட்கள் போதுமோ நல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால் அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன் எண்ணில்லாத நன்மைகட்காய் அல்லேலூயா பாடிடுவேன் 2 இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால் சோதனையாம் வெள்ளத்திலே ம