நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
Nerukkathin Ellai Purinthavare
நேசப் பாட்டு பாடப்போறேன் இயேசய்யா கூட ஆசை பாட்டு பாடப்போறேன் இயேசப்பா கூட இயேசுவே என் இயேசுவே என் என் அன்பே என் ஆருயிரே உம்மில் நான் என்னை மறந்தேனே (2)
என் கண்ணீரின் நேரத்தில், உம் தோளில் சாயும் போதினில் உம் செயல் நினைத்தால் கண்ணீரும் ஆனந்தம் உயிரின் உயிராய் என்னில் நீர் இருப்பதினால் உலகம் வெறுத்தாலும் நீர் மட்டும் போதும் (2)
உம் பெயர் சொல்லும் போது கண்விழி மூடும் போது என் இதயத்தில் உந்தன் சமூகம் ஆனந்தம் மலை போல் உயரும் உம் அன்பின் உயரம் மலையைக் காட்டிலும் பெரிதல்லவோ
உலகத்தின் ஆசைகள், என்னை இழுக்கின்ற வேளையில் உம் கண்ணீரின் விழிகள் என்னை அனைக்குதே திரும்பும் திசையெல்லாம் உம் முகம் மட்டும் தெரிகிறதே உந்தன் நேசம் என் பெயர் மறக்கச் செய்கிறதே (2)
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.