♪♫
TA-1809
Tamil
பத்தருளத்தி லிடைவிடாமல்
Paavam pokkum jeevanathiyai
12
views
பல்லவி
பாவ சாபம் நோய் மிகுந்து பதறி நின்றிடும் உன்னையும் - அழைக்கிறார்
1ம் சரணம்
உன் கஷ்டம் அறிந்த தேவனே உன்னை சிநேகித்த ஏசுவே நம்பிக்கையுடனே அண்டிக்கொள்வாயானால் நீட்டிடுவார் அன்பு கரம்
2ம் சரணம்
இயேசுவின் ரத்தத்தை நம்பி வா எல்லா வினைகளும் தீர்ந்திடும் பஞ்சைப் போல் வெண்மையாய் உள்ளத்தை மாற்றிடும் பரனை நோக்கியே வா
3ம் சரணம்
தாய் தந்தை கைவிட்டாலும் உன்னை தாங்கிச் சுமந்திட வல்லவர் நல்ல சுமைதாங்கி கல்வாரியில் தொங்கும் நசரேயன் ஏசுவைப் பார்
4ம் சரணம்
எல்லாம் முடிந்தது என்றாரே பொல்லா உலகத்தை வென்றாரே வஞ்சிக்கும் லோகத்தின் மாறிடும் அன்பை நீ விரும்பாதே திரும்பி வா
5ம் சரணம்
பாவத்தினால் வரும் சோதனை பாரம் உன்வேதனை நீக்குவார் புயலுக்குள் அமைதி புகலிடம் இயேசுவே பயமின்றி நம்பியே வா