♪♫
TA-1812
Tamil
பாவி கேள்! ஏன் கெடுவாய்?
Paavi Kael Yean Keaduvaai
0
views
பல்லவி
பாவி நான் என்ன செய்வேன் கோவே ஜீவன் நீர் விட்டதற்காய் தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ
1ம் சரணம்
நாடி எனைத் தயவாய் மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசே ஆடுகளுக்காக நீடி உயிர் தர பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ
2ம் சரணம்
பொன்னுல காதிபனே தேவீர் என்ன செய்தீர் ஐயனே சின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும் சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்
3ம் சரணம்
வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர் சீரா மனுடவதாரா சருவாதி காரா பரம குமாரா ஓலோலமே
4ம் சரணம்
வாதை உமக்கெதினால் உண்டாயிற்று பாதகிபாவத்தினால் வேதம் நிறைவுற ஆதி பவம் அற நீதி தரும் யேசு நாத சுவாமியே
5ம் சரணம்
குற்றமற்ற மீட்பர் பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பார் கொற்ற வர்க்கும்