TA-1815
Tamil

பாடுபட்டோரையே சேர்த்திட வருவார்

Padupatooriaye

0
views
பல்லவி

பாடுவேன் போற்றுவேன் உயர்த்தி உயர்த்தி பாடுவேன் உம்மை நம்புவேன் நேசிப்பேன் உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் பாவ வாழ்க்கை வாழ்ந்திருந்தேன் பாவத்திலிருந்து மீட்டீரே உலகத்தின் பின்னால் சென்றிருந்தேன் பேர் சொல்லி என்னை அழைத்தீரே இயேசுவே என் இயேசுவே இனி நான் வாழ்வது உமக்காக -2

1ம் சரணம்

தேடுவேன் நாடுவேன் உமக்காய் ஊழியம் செய்திடுவேன் உம்மை ஆராதிப்பேன் துதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன் நன்மைகள் என்றும் செய்பவரே நன்றியுடன் நான் பாடிடுவேன் அதிசயமாய் என்னை நடத்தினீரே உம் புகழை என்றும் பாடிடுவேன்

2ம் சரணம்

என்னை காக்க மண்ணில் பிறந்தார் என்னை மீட்க நீர் வந்தீர் என் பாவம் யாவும் போக்க எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர் உம்மை போல் தெய்வம் இல்லை உன் அன்பிற்கு இணையே இல்லை எனக்காய் உம்மைத் தந்தீர் சாத்தானின் தலையை வெல்வீர் தாயைப்போல் என்னை நேசிக்கும் தேவன் உன்னையும் நேசிப்பார் வா வா தங்கமோ வெள்ளியோ தேவையில்லை உந்தன் உள்ளத்தை மட்டும் நீ தா தா எந்நாளும் என்றென்றும் என் வாழ்க்கை உமக்காக எங்கேயும் எப்போதும் என் வாழ்வே இயேசுவுக்காக