TA-1818
Tamil

பணிந்திடுவேன் உம் நாமத்தையே

Paninthiduven um namathai

0
views
பல்லவி

பனித்துளி போல் இறங்கிடுதே உந்தன் வார்த்தையே பரவசமாய் மாற்றிடுதே உந்தன் நேசமே நேசமே உம்மைத் துதிக்கின்றோம் (4) வாழ்வெல்லாம் செழிப்பாய் மாறும் இருளெல்லாம் ஒளியாய் மாறும் முகமுகமாய் உம்மை பார்த்ததாலே மகிமை அதிசயமே எந்தன் இயேசுவே நான் உம்மைப் போல மாறுவேன்

1ம் சரணம்

ஆபிரகாமின் தேவன் நீரே விசுவாசம் தந்தவர் நீரே யாக்கோபின் தேவனும் நீரே துணையாக வந்தவர் நீரே எலியாவின் வல்லமை வேண்டுமே பல மடங்காய் என் மேல் வாருமே

2ம் சரணம்

நன்மைகள் அளிப்பவர் நீரே கிருபைகள் கொடுப்பவர் நீரே கனி தந்து உயர்த்திடுவாரே செல்வத்தை தந்திடுவாரே பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பேனே சுக வாழ்வு வந்து சேருமே