TA-1843
Tamil

Po Arpamaam Sittrinbamae

Po Arpamaam Sittrinbamae

0
views
பல்லவி

போதுமப்பா பாரங்கள் தாங்க முடியல சாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா – 2 தோள் மீது சுமந்து கொள்ளுங்க கண்ணீரை கரத்தில் வையுங்க – 2

1ம் சரணம்

உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யா வேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யா கரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யா காணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா – 2

2ம் சரணம்

எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யா செத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யா தனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்ல வாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம் – 2

3ம் சரணம்

கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன் வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன் கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன் இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன் – 2