ரட்சிப்பு சுத்த தயவால்
Ratchippu Suththa Thayavaal
இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது
நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார்
இம்மட்டும் உதவின எபினேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனை விட என் தேவன் பெரியவரே
தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன்
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப் போல நடத்துகிறீர் அபிஷேகம் செய்கின்றீர் - என்னை
மலைகள் குன்றுகள் விலகினாலும் மாறாது உம் கிருபை அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர் அணைத்து சேர்த்துக் கொண்டீர்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.