TA-1891
Tamil

சத்திய வேதத்தைத் தினம் தியானி

Sathiya vedathai dinam

0
views
பல்லவி

சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் சத்திய வேதம் எத்தனை துன்பம் துயரம் வந்து பக்தனை தேற்றிடும் ஒளஷதம்

1ம் சரணம்

நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன் இதயம் மகிழும் கண்கள் தெளியும் இருண்ட ஆத்துமா உயிரடையும்

2ம் சரணம்

பேதைகளிடம் ஞானம் அருளும் தேவ புத்தகம் மேன்மை தரும் இரவும் பகலும் இதன் தியானம் இனிமை தங்கும் தனிமையிலும்

3ம் சரணம்

வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார் இலைகள் உதிரா மரங்கள் போல இவர்கள் நல்ல கனி தருவார்

4ம் சரணம்

உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் கள்ளங் கபடெல்லாம் அகற்றும் கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும் கனமடைய வழி நடத்தும்

5ம் சரணம்

கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கன்மலையையும் நொறுக்கிடுமே இதய நினைவை வகையாய் அறுக்கும் இரு புறமும் கருக்குள்ளதே

6ம் சரணம்

வானம் அகலும் பூமி அழியும் வேத வசனம் நிலைத்திருக்கும் பரமன் வேதம் எனது செல்லவம் பரவசம் நிதம் அருளும்