Seermigu vaan puvi deva
Seermigu vaan puvi deva
சீரேசு ராஜன் ஆளுகின்றார் சீயோனில் ஜொலிக்கின்றார் வேகம் தன் பக்தரை அழைக்கின்றார் ஏகம் இணைத்திடுவார்
ஆட்டுக் குட்டியானவர் - நித்தம் அங்கே கொடு முடியில் - தேவ நின்று விளங்கிடும் தூய தரிசனம் சென்று மகா முகங்கண்டிடுவோம் அன்று பேரானந்தம் பொங்கிடுமே
சர்வ உலகத்திற்கும் - சீயோன் பர்வதம் மகிழ்ச்சியே - என்றும் பூரண வடிவு சீயோன் தலைநகர் பூரண தேவனே பிரகாசிக்க பாரும் கிரீடங்கள் மின்னிடுதே
தேவப்பிதா நாமமே - பெற்று தங்களின் நெற்றியிலே - தூய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் இலக்கம் நிறைவுடன் நிற்கின்றனர் இந்த நற்பங்கையும் நாடிடுவோம்
பூமி முதற்பலன்கள் - தேவன் பாரில் தெரிந்தெடுத்தார் - அதோ பேரிடி ஓசையும் அங்கே தொனிக்குதே பெரு வெள்ளம் போல இரையுதே பக்தர் புது பாட்டு பாடிடவே
வாயில் கபடமில்லை - பாவ வஞ்சனை ஒன்றுமில்லை - பக்தர் கறை திரை நீங்கி தூய பரிசுத்த கற்புள்ளோராகவே இலங்கினர் கர்த்தரைப் பின்பற்றி சேவிப்பவர்
ஜெயம் சிறந்திடுவோம் - அங்கு சீக்கிரம் சேர்ந்திடுவோம் - பூவில் தேவ மணவாட்டி ஸ்தானம் அடைகுவோம் தூய தகுதியும் வேண்டிடுவோம் திவ்ய இலக்கண்டடை ஓடிடுவோம்