TA-1928
Tamil

நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்;

Sothiram pathiranae

0
views
பல்லவி

ஸ்தோத்திரம் செய்வேனே ரட்சகனைத் ஸ்தோத்திரம் செய்வேனே பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும்

1ம் சரணம்

அன்னை மரி சுதனை - புல்மீது அமிழ்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை

2ம் சரணம்

கந்தை பொதிந்தவனை - வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனை வான பரன் என்னும் ஞான குணவானை

3ம் சரணம்

செம்பொன்னுருவானைத்-தேசிகர்கள் தேடும் குருவானை அம்பர மேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று, பைம் பொன்மலர் தூவி