TA-1943
Tamil

மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா

Sthothiram yaesu theva

0
views
பல்லவி

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா நல்லவரே வல்லவரே

1ம் சரணம்

கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார் ரட்சகரும் தேவனுமானார் – நான் நம்பின என் துருகமும் கேடகமானார் ரட்சணிய கொம்புமானார்

2ம் சரணம்

தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர் எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர் மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்

3ம் சரணம்

உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம் காருணியத்தால் பெரியவனானேன் நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர் வழுவாமல் நடந்து செல்கிறேன்